இந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி மாவத்தகமவுக்கு படையெடுத்துள்ளதால் பயிர்களைப் பாதுகாப்பதற்காக உயர்ந்த பூச்சி நாசினிகள், இரசாயனங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ள மாவத்தகம பிரதேசத்திலுள்ள கட்டுப்பிட்டிய எட்வட் தோட்டத்திற்கு நேற்று (02) விஜயம் செய்த வடமேல் மாகாண ஆளுநர் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வாழை மரம் மற்றும் தெங்கு பயிர்ச் செய்கைகளை நேரடியாகப் பார்வையிட்டபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், விவசாயிகளை அச்சுறுத்தி வரும் இந்த வெட்டுக்கிளிகளை முற்றாக இல்லாமற் செய்து கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதன் தாக்கத் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
நேற்று விசேடமாக அதற்கான பூச்சி நாசினி விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் ஆதரவுடன் பூச்சியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள் மற்றும் பிராந்திய விவசாய இயக்குனர்கள் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலுக்கு தேவையான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாவத்தகம நிருபர்
No comments:
Post a Comment