கைதான போதைத் தடுப்பு பிரிவு பொலிஸார் நால்வர் பணி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

கைதான போதைத் தடுப்பு பிரிவு பொலிஸார் நால்வர் பணி நீக்கம்

பாரிய அளவான போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில், கைது செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகரால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 25 மற்றும் 26ஆம் திகதிகளில், குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளில், முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரின் மினுவாங்கொடையிலுள்ள வீட்டிலிருந்து, போதைப் பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட கார் ஒன்று, ரூபா 940,000 இலட்சம் பணம், செய்மதி தொலைபேசி, GPS உபகரணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த, உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சாஜெண்ட்கள் இருவர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆகியோரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment