தனித்துவ அரசியலை பிழை காணும் வித்துவானுகள் யாரு? - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

தனித்துவ அரசியலை பிழை காணும் வித்துவானுகள் யாரு?

சம்மந்தமே இல்லாம வாக்கை ஜேவிபி. இன் பால் சீரலிக்கும் சில மகான்களும் உண்டு!

வெறுமென சிலர் வறண்ட மூலைகளால் சிந்தித்து மாற்றத்தையும் அதனூடே புதிதொன்றைத் தோற்றுவிக்க வெளியான நம்மவர் கூட்டம் அது மாத்திரமல்ல தங்களை சமூகத்தில் பெரிய அறிவாளிகளாகவும் காட்ட முற்பட்ட கூட்டமும் கூட நண்பர்களே காரணம் இல்லாமல் எதுவுமே வெளிப்படாது. அப்படித்தான் இந்த தனித்துவ அரசியல் மூச்சும் ஆலமரமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

இப்போதைய கால கட்டங்களில் தனித்துவ அரசியலின் பால் ஏற்பட்டதல்ல இந்த பிணக்குகள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் தனித்தனியே அரசியல் செய்வதனால் வந்த வினை தான் தனிக் கட்சியும் சோரம் போகும் அவல நிலையும்.

ஆளுக்கு ஒரு கட்சி அரசியல் வாதமும் வாய்க்கு வந்தாற் போல் அதனைக் கொண்டு செல்லலும் தங்களை சமூகத்தில் தனியாட்களாக பிரித்துக் காட்டவும் தனிச் சிறப்பும் தேர்வும் கொண்டவர்களாக காட்டவும் குழி தங்களுக்கு குழி தோண்டும் கரயானிடமே சென்று சரணடையும் ஒரு கூட்டம்.

சிலர் இரண்டு பக்கமும் அல்ல ஆகையால் தான்தோன்றித் தனமாக செயற்படுவார்கள்.

இனத்தின் பேரில் அரசியல் கட்சிகள் இருப்பதில் தவறல்ல. அது எதனை முன் வைக்கிறது என்பது தான் தேவை. அவர்களின் வழிக்கே வருவோம்

இனத்தின் அல்லது சமூகத்தில் பெயரில் கட்சி உருவாகக் கூடாது என்று அரசியல் யாப்பில் எங்கு உள்ளது?

மார்க்கத்தில் எங்கு உள்ளது அறிவியல் அரசியல் நகர்வுகளில் எங்கு உள்ளது?

அப்படி என்றால் தோழர்களே நான் ஒரு வினாவிற்கு வரட்டா? அந்த வினாவை நான் சொன்னால் வேறு திசைகளுக்கு இந்த பதிவு சென்றுவிடும். என்றாலும் பொதுவாக கேட்கிறேன் இன,மத அடிப்படையில் பெயரையும் வைத்துக்கொண்டு பல அமைப்புக்களையும் இந்த நாட்டில் உலா வரும் போது எதை உணருகிறீர்கள்?

அப்படியாக இருக்கும் போது அவைகளுக்கு எதிராக வரும் பிரச்சினைகளை யார் முன் நின்று தடுப்பது?

தமிழீழப் பிரச்சினைகளின் போது அவர்களினுடைய இனத்தின் பெயரில் இருந்த அமைப்புகளுக்கா கொடுபிடி மேற்கொள்ளப்பட்டது? அல்ல அந்த நாமத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கா?

நினைவிருக்கட்டும்!

ஏப்ரல் 21 தாக்குதலில் என்ன நடந்தது?கட்சிகள் ஜனநாயகம் அது இன முருகளாக அமையாது!

தனித்துவம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை வாழ்வதில் அர்த்தமே இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

தனித்துவம் என்றால் என்ன?

பல மத, இன, மொழி, கலாச்சாரம், பாரம்ரியம், தனித்துவம் கொண்ட மக்கள் சுதந்திரமாக யாருக்கும் தீங்கு ஏற்படாது தங்களின் நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்ளக் கூடிய அரசியல் யாப்பு கொண்ட ஒரு பண்மைத்துவ நாட்டில் எல்லாமே இன,மத ங்களில் பேரில் இயங்கலாம் ஆனால் அவை அனைத்தையும் தலைமை வகிக்கும் அரசியல் கட்சிகள் மாத்திரம் தனித்துவ அடிப்படையில் அமைந்தால் மட்டும் பிழை என விவாதிப்பது! எப்படி ஏற்கக் கூடியது?

எல்லாமே இப்பொழுது படித்தவர்கள் மீதான மூளைச் சலவை தான் நடந்து கொண்டிருக்கிறது எனலாம்.

பொதுத் தேர்தலின் சமிக்ஞைகள் ஆரம்பித்திருக்கும் நிலவரத்தில் சமூகத்தை மீண்டும் அதள பாதாளம் தள்ளுகிற வேலையில் புரிந்து கொள்ளாதவர்களும் உணர முடியாதவர்களும் சூறாவளி வேட்டையை ஆரம்பித்துள்ளனர்!

தனித்துவ அரசியலின் உண்மைத் தன்மை புரியாத சில ஆசாமிகள் பேரின வாதத்திற்கு சோரம் போகிற 'ஓண்டாஞ்சாமி' போடும் முதுகெழும்பற்றவர்களுக்காக நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்புலனாக உள்ள தனித் தனி ஆட்களின் சுயதேவைகளின் நிமிர்த்தமும், சம்மந்தமே இல்லாமல் நமது நண்பர்கள் ஜேவிபி ஜயவேவா கூறும் காட்சிகளும் பதர வைக்கிறது!

இங்கே வந்து யாரும் யாருக்கும் பாடம் எடுக்கத் தேவையில்லை ஜேவிபி அதன் பூர்வீகம் புரிந்துமா இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் எனும் போது திகைக்க வேண்டி உள்ளது! அது இல்லயாம் நல்லா படித்தவர்களாம் Smart political ஆம் புது சிந்தனையோடு உலா வருகிறார்களாம். என்றெல்லாம் பல்லாயிரம் கண்மூடித்தனம் கொண்ட புத்தி சாதூர்யமான பேச்சுக்களுடன் நம்மவர்கள் உலா அமைந்திருக்கிறது!

படித்தால் தான் அரசியல் என்று யார் கூரிய கதை?

எங்காவது ஓரிரு நாடுகளில் இருக்கிற சட்டம் எல்லா இடங்களுக்கும் சாத்தியப்படாது என்பதனை நமது தோழர்கள் புரிந்து கொள்ளட்டும். அவர்களுக்கு இஸ்ஸாமிய முறையில் பதிலளிப்பதென்றால் மற்று நடைமுறையிலும் நீண்ட காலப் போக்கில் பதில் கூறுவதென்றாலும் பல உள்ளது...

றஸீலுள்ளாஹ் கூட உம்மி நபி தான் ஆரம்ப காலத்தில் சமூக மறறும் அரசியலை முன்னெடுத்தவர்களில் படிக்காத தலைவர்கள் தான் அதில் முன்மாதிரிகள் என்பது அனைவரும் அறிந்தவையே நான் கூட எனது இந்த சிரிய வயதெல்லை காலங்களிலெல்லாம் கூட படித்தவர்களை விட படிக்காத மேதைகள் என அனேகரைக் கண்டுள்ளேன் அவர்களின் ஆணித்தரம் வாய்ந்த பதில்களும் கருத்துக்களும் இங்கே உள்ள நமது படித்த கலாநிதி பட்டம் பெற்றவர்களிடம் கூட அனேகரிடம் காண முடியாது என்பது திண்ணம்!

அப்படி என்றால் கூட அவர்களின் வழிக்கே வருவோம் படித்தவர்கள் தான் வேண்டும் என்றால் நமது தனித்துவ அரசியலிலும் அதற்கு குறைவே இல்லை ... வைத்தியர்கள் தொடக்கம் பெறியியலாளர்கள் இருந்து சட்டத்தரணிகள் முதுமாணிகள் என்று கலாநிதிகளும் ஏறாழம் உண்டு.

ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இங்கு ஒன்றும் குர்ஆன் வசனம் இல்லை சொல்வது செய்வது எல்லாம் சரியுர நடந்தேர... தோற்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல அவைகள் எம்மை இன்னும் இன்னும் புடம் போடுகிறது என்றுதான் அர்த்தம்...

நான் யாரையும் புகழ்ந்துரைத்தோ அல்லது யாருக்கும் அல்லக்கையாகவோ இதை எல்லாம் கூரவில்லை அரசியல் செயற்பாடுகளில் இருந்தாலும் அரசியல் பதிவுகளில் இருந்து அதிகம் தவிர்ந்து வருவது வழக்கம்.

ஆனால் இன்னும் இன்னும் வாய் மூடி இருந்தால் ஆஸ்தி கெட்டுப் போய்விடும் என்றுதான் தனி மனித சோரம் போபவர்களே எழுதும் போது அது மாத்திரமல்ல இவர்களுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்த அரசியலையே பிழை போட ஆரம்பித்துள்ளார்கள் வித்துவானுகள் அப்படி இருக்க நாங்கள் எந்த தனி மனித அரசியல் கொம்மனுக்கும் கூஜா தூக்குபவர்களும் அல்ல ஆகவே தனித்துவ அரசியலைப் பற்றி எழுதுவதில் எந்த தவரும் இல்லை என உணர்ந்து கொண்டேன் தவிர எந்த நாதி கொண்ட அரசியல் வாதியின் புரம் இருந்தும் எழுத ஆரம்பிக்கவில்லை என்பதனையும் புரிந்து கொள்ளட்டும்.

தேர்தல் வந்தால் தனிப்பட்ட மூலைச்சலவை அரசியல் பேச்சாளர்கள் ஏறாழம் வருவார்கள். அரசியலில் இன்று யாரும் யாருக்கும் பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை அனேகர் அதில் புடம் போடப்பட்டவர்களே.

அரசியலில் பாடம் எடுக்க வேண்டி தேவை வந்தால் அதனை வகுப்பறைகளுடன் முடித்துக் கொள்ளுங்கள்! அதை விடுத்து வெறுமென பேசி மாத்திரம் கொள்ளாமல் செயற்பாட்டு அரசியலை உணர்வு பூர்வமாக சிந்தியுங்கள்.... நடைமுறைக்கும் கொண்டு வாருங்கள். வெறுமென தவறுதலாக பேசும் அல்லது நடந்து கொள்ளும் ஓரு சிலவற்றை நாதி கெட்டு ஒன்றுமே இல்லை தங்களின் அரசியலை முன்னெடுக்க என்பதனால் நாளும் தோரும் வீண் விமர்சனம் வேண்டாம் தோழர்களே.... நான் கூட எவரையும் எந்த அரசியல்வாதியையும் கீழ்த்தரமான விமர்ங்களைச் செய்வதில்லை ஏனெனில் அவர்கள் அனைவருடனும் பேசியும் இருக்கிறேன் தனிப்படையில் அவர்கள் எனக்கும் மிக பிடித்தமானவர்கள்.

ஆகவே தனித் தனி அரசியலையும் சோரம் போய் இழிவு படாமலும் தனித்துவ அரசியலை நாமமாகக் கொள்ளுங்கள்.

எப்படியோ வென்றோம் என இருக்கக் கூடாது இப்படித்தான் வென்றோம் என்பதே நமக்கு மகுடம்.

வெற்றி பெற்றும் இழிவாக. 

'ஓண்டாஞ்சாமி' போட்டு வாழ்வதை விட தோழ்வியடைந்தாலும் பரவாயில்லை எவர் முன்னாடியும் நேர் நெஞ்சுடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.

வெற்றி தோழ்வியை தீர்மானிப்பது அல்லாஹ் தனிதுவமாய் செயற்படுவதே நமது நேர்வழி.

தனித்துவ அரசியலை பிழை கூர எவனுக்கும் தகுதி இல்லை! 

நண்பர்களே சேவைகளையும் வாழ்வாதாரங்களையும் மாத்திரம் அரசியல் என கொள்ளாதீர்கள்! முதலில் நமக்கு அடையாளம் தேவை அந்த முகவரி இல்லை என்றால் அது மறைந்து போனால் நாம் திரானியற்ற சமூகமாகிவிடுவொம் என் உயிர்த்தோழர்களே.

இதை எல்லாம் நான் நேரம் ஒதுக்கி எழுதுவதில் அணுவளவு கூட பயண் உள்ளதா என எனக்கு தெரியாது . ஆனால் அரசியல் ரீதியாக எதையும் எதிர்பாராத ஜென்மம் என்பதை என்னை அறிந்தவர்களுக்கு தாராளம் தெரியும்.

அப்படி இருக்க ஏன் இந்த நடவடிக்கைகளில் அதுவும் இந்தக் காலத்தில் இருக்கிறீர் என அனேக உறவாரர்கள் கேட்டதுண்டு.

பதிலுக்கு வருகிறேன்.... நாம் பிறந்தோம் வெறுமென நமக்காக சாதித்தோம் என்றிருக்கக் கூடாது தோழர்களே இந்தெ அற்ப உலகில் இன்றா அடுத்த நொடியா என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் இதுதான் நமது வாழ்க்கை ஆக நமக்கு நமது சமூகத்திற்கு இருக்கும் தனித்துவமும் அதனை நிலை நாட்டுவதுமே நமக்கு நமது சந்ததிகளுக்கு மற்றும் நமது ஈடேற்றத்திற்கும் வழி வகுக்கும். தோழர்களே தனித்துவத்தில் கிலாபத் பணி மிகவும் இன்றியமையாத ஒன்று அது வெறுமென தனித்தேர்வுகளில் அடங்காது.

தனித்துவம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை! அதிலும் அரசியலில் தனித்துவம் தார்மீகக் கடமை! 

பஷீர் இர்ஹான்

No comments:

Post a Comment