அரேபிய கப்பல் பணியாளர்கள் 51 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானத்தில், துபாயிலிருந்து இக்குழுவினர் நேற்று (28) காலை 6.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவன் கார்ட் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலில் பணியாற்றுவதற்காக இக்குழுவினர் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அரேபிய கப்பல் பணியாளர்கள், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன் முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment