1½ கிலோ கிராம் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

1½ கிலோ கிராம் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது

சுமார் 1½ கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) முற்பகல் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பில், திவுலபிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில், சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான, 1.496 கிலோ கிராம் ஹெரோயினுடன் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கிம்புலாபிட்டிய மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment