நிரந்தர காணி உரிமை கோரி மலையக இளைஞன் மட்டக்களப்பில் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 30, 2020

நிரந்தர காணி உரிமை கோரி மலையக இளைஞன் மட்டக்களப்பில் போராட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

தற்போது நாட்டில ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் தொற்று நோய் காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வரும் மலையக மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கான நிரந்தரத்தீர்வான நில (நிலம்) காணி உரிமையினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கையினை முன்வைத்து நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தொடர் போராட்டமொன்றினை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கருகாமையில் அமைக்கப்பட்டுள்ள ஒளவையார் சிலைக்கு முன்னாள் முன்னெடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டம் டங்ஸ்டன்ட் கற்ரல் பிரிவு பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகேஸ்காந்த் என்ற இளைஞன் தனது தாய், இரு சகோதரிகளுடன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் மட்டக்களப்பு, வாழைச்சேனை முல்லை நகர்ப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கும் குறித்த இளைஞன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விவசாயம் செய்து வாழ்வதற்கு நிரந்தர வாழ்விடமாக நிரந்தர (நிலம்) காணி உரிமைக்காக "மலையகத்தின் ஒரு குரல் " என்றும் விடுதலை வேண்டுமென பதாகையினைக் காட்சிப்படுத்தியவாறு தமக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தினை முன்னெடுப்பதாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.

No comments:

Post a Comment