பொதுத் தேர்தல் தாமதமாவது குறித்து அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தேர்தலை நடத்துவதை தாமதிக்க கூடாது என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் இணக்கப்பாட்டுடன் கூடிய விரைவில் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது கடந்த தேர்தலின் போது மக்களிற்கு வழங்கிய ஆணைக்கு மாறான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 நிதிகள் செலவிடப்பட்டமை குறித்த விடயங்கள் பற்றி புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் ஆராயலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்சிசி உடன்டிபடிக்கையில் கைச்சாத்திடாது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment