பாகிஸ்தானில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 476 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவத்துறையைச் சேர்ந்த 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 250 பேர் டொக்டர்கள். 110 பேர் தாதிகள். இவர்கள் அனைவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தவர்கள்.
இதில் ஐந்து டொக்டர்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள்.
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக டொக்டர்கள் தங்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை. இதனால் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் லொக்டவுன் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசையும், மாகாண அரசையும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே பத்திரிகை துறையைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment