ஜப்பானிலிருந்து 235 பேருடன் இலங்கைக்கு வருகை தந்த விசேட விமானம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

ஜப்பானிலிருந்து 235 பேருடன் இலங்கைக்கு வருகை தந்த விசேட விமானம்

இலங்கைக்கு வர முடியாமல், ஜப்பானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 235 பேர், இன்று (16) அதிகாலை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜப்பானின் நரீட்டா விமான நிலையத்திலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 455 எனும் விசேட விமானம் இன்று அதிகாலை 3.38 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இப்பயணிகள் குழுவினர் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், இராணுவத்தினரால் அவர்களும் அவர்களின் பயணப் பொதிகளும் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.

இப்பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான அறிகுறிகள் தென்படுகிறதா என்பது தொடர்பிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து சோதனைகளின் பின்னர், இராணுவத்தினரால் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டியில் அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment