இன்று (29) பிற்பகல் 12.25 மணியளவில் இலங்கை ஊடாக தமது நாட்டிற்கு செல்வதற்காக வந்த சீனாவைச் சேர்ந்த 221 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
பிரிட்டனின் லண்டன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 504 எனும் விமானம் மூலம் 221 சீனப் பிரஜைகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
இவர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் மீண்டும் UL866 எனும் ஶ்ரீலங்கன் விமான சேவை விமானத்தின் மூலம் சீனா நோக்கி புறப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
இலங்கையர்களே இவ்வாறு வந்ததாக எமது செய்தியாளர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என தற்போது விமான நிலைய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வேலைவாய்ப்பிற்காகச் சென்ற இலங்கையர் சிலர் இன்று (29) காலை, ஜப்பானின் நரீட்டாவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்ததோடு, நேற்றிரவு (28) பெலாருஸிலிருந்து 277 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதேவேளை இலங்கைக்கு வர முடியாமல், பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 221 பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (29) பகல் வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையிலிருந்து புறப்பட முடியாமல் இருந்த இந்திய பிரஜைகள் 170 பேர், இந்தியாவின் விசேட விமானம் மூலம் இன்றையதினம் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment