பாகிஸ்தானில் ஒரே நாளில் 2164 பேருக்கு கொரோனா பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2164 பேருக்கு கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 32 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,133 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment