எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக இரண்டு தினங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறியுமில்லையென இரத்தப் பரிசோதனையில் அறிய முடிந்ததையடுத்து, வைத்தியசாலையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்
இவர் கொழும்பில் தனியார் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பிரச்சனை காரணமாக வாழைச்சேனை பிரதேசத்துக்கு திரும்பிய நிலையில், சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தலுக்கமைய சுய தனிமைப்ப்படுத்தலில் இருந்தார்.
தனிமைப்படுத்தலிலிருந்து வந்த சில நாட்களில் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட, பாதுகாப்புக்கருதி சந்தேகத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறியுமில்லையென இரத்தப் பரிசோதனையில் அறிய முடிந்ததையடுத்து, வைத்தியசாலையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பெரும்பாலான மக்கள் அச்ச நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுயதனிமைப்படுத்தலில் உள்ளவருக்கு கொரேனா தொற்றுள்ளதென்றும், குறித்த நபர் மீது பொய்யான தகவல்களை முகநூல், வட்ஸ்சப் குழுமங்களில் வெளியிடுபவர்கள் தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்டால், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment