80 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

80 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 14 லட்சத்து 18 ஆயிரத்து 572 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 லட்சத்து 35 ஆயிரத்து 696 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 47 ஆயிரத்து 925 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து 1 ஆயிரத்து 398 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 81 ஆயிரத்து 478 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் சில வருமாறு:-

இத்தாலி - 17,127
ஸ்பெயின் - 13,897
அமெரிக்கா - 12,790
பிரான்ஸ் - 10,328
இங்கிலாந்து - 6,159
ஜெர்மனி - 1,983
ஈரான் -- 3,872
சீனா - 3,331
நெதர்லாந்து - 2,101
பெல்ஜியம் - 2,035
சுவிஸ்சர்லாந்து - 821
துருக்கி - 725
பிரேசில் - 667
ஸ்வீடன் - 591

No comments:

Post a Comment