காத்தான்குடி வைத்தியசாலையில் 45 கொரோனா தொற்றாளர்கள் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

காத்தான்குடி வைத்தியசாலையில் 45 கொரோனா தொற்றாளர்கள் அனுமதி

மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை (22.04.2020) அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்ததையடுத்து, இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் குறித்த தடுப்பு முகாமில் 32 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை கடந்த திங்கட்கிழமை (20.04.2020) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் மேலும் 13 பேருக்கு தோற்று இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களை நேற்று புதன்கிழமை அழைத்துவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த 2 தினங்களில் 45 தொற்று நோயாளர்கள் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

No comments:

Post a Comment