ஊரடங்கை மீறி கைதானோர் 15,273 ஆக அதிகரிப்பு - 3,855 வாகனங்கள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

ஊரடங்கை மீறி கைதானோர் 15,273 ஆக அதிகரிப்பு - 3,855 வாகனங்கள் கைப்பற்றல்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இன்று (06) நண்பகல் 12.00 மணியிலிருந்து இன்று மாலை 6.00 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 104 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 15,273 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,855 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment