இந்தியாவில் சிக்கியிருந்த 101 மாணவர்களும் இலங்கையை வந்தடைந்தனர்! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

இந்தியாவில் சிக்கியிருந்த 101 மாணவர்களும் இலங்கையை வந்தடைந்தனர்!

இந்தியாவின் அமிர்தசரஸிலிருந்து இலங்கை மாணவர்களை ஏற்றச் சென்ற விமானங்களில் ஒன்று இலங்கை வந்தடைந்தது. இதில் இந்தியாவில் சிக்கியிருந்த 101 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள மாணவர்களே இன்று (வியாழக்கிழமை) நண்பகல் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் லாஹுர் மற்றும் கராச்சியிலிருந்த 113 மாணவர்கள் நேற்று முந்தினம் மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனை அடுத்து, இரண்டாம் கட்டமாக இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள 101 மாணவர்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

யூ.எல் 146 எனும் இலக்க விமானத்தில் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், மூன்றாம் கட்டமாக இந்தியாவின் கோயம்புத்தூரில் தங்கியுள்ள 117 மாணவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

குறித்த மாணவர்கள், யூ.எல் 194 எனும் இலக்க விமானத்தில் நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The second of our special repatriation flights UL1145 reached Sri Lanka from Amritsar, India, today bringing home a group of stranded Sri Lankans. We were indeed privileged to be of service to our country.

View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

56 people are talking about this

No comments:

Post a Comment