நீர்கொழும்பு கொலை தொடர்பில் எழுவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

நீர்கொழும்பு கொலை தொடர்பில் எழுவர் கைது

நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (10) பிற்பகல் குறித்த 06 பேரும் சட்டத்தரணி மூலமாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியமுல்லை ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரையில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment