கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய சிறைக் கைதிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுடனான கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறைச்சாலைத் துறையினரின் சீருடைக்கு பயன்படுத்தும் துணி வகைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த முக மூடிகளை தயாரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு சிறைக்கும் தலா நூறு மீட்டர் துணி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறையறைகளிற்குள் நுழைவதற்கு முன்னதாக கைதிகள் கைகளை கழுவவும் வசதிகள் செய்யுமாறு அனைத்துசிறை கண்காணிப்பாளர்களுக்கும் சிறைத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment