நாளை (18) நள்ளிரவு (19) முதல் 31 ஆம் திகதி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தறையிறங்குவது இடைநிறுத்தப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் விமானங்கள், பயண வழிமாற்ற விமானங்கள் (Transit) ஆகியன தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன சரக்கு விமானங்களின் (Cargo) சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என, சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment