பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 7, 2020

பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

அந்த வகையில், 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் தேசியக் கட்சி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார். 

இது குறித்த கடிதம் இன்று (சனிக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.

இருப்பினும் குறித்த கூட்டணியின் சின்னம் தொடர்பாக சஜித் தரப்பு மற்றும் ரணில் தரப்புக்கு இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகின்றது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சஜித் தரப்பினர் பங்கேற்கவில்லை.

இதனால், தொடர்ந்தும் சஜித் தலைமையிலான கூட்டணியின் சின்னம் இறுதி செய்யப்படாத நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது

இதனிடையே, இந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிரான ஒன்றென செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.

இது ஒரு துரதிர்ஷ்டவசமான தீர்மானம் எனவும் இந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒரு சிலருடையது எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment