கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவியுள்ள நிலையில் முஸ்லிம்கள் தமது ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகைகளை குறுகிய நேரத்தில் முடிக்குமாறு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில், நேற்றையதினம் (13) திணைக்களத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க குனூத் அந்-நாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளிலும் ஒரு மாத காலத்திற்கு சுருக்கமாக ஓதி வருமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்லுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்கள்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிவிப்பு.
No comments:
Post a Comment