எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 16ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாகவும் வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாகவும் (Public, Bank, Mercantile Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, நாளை (15) முதல் இரு வாரங்களுக்கு எவ்வித நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment