நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் உள்ளிட்ட, மக்கள் அதிகளவில் பங்குபற்றும் ஆராதனைகள் மற்றும் வழிபாடுகளை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றையதினம் (14) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாதம் இறுதி (31) வரை, குறித்த விடயத்தை பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் எவ்வித அரசியல், இன, மத ரீதியிலான வேறுபாடுகளும் இன்றி, அரசாங்கம் முன்னெடுத்து வரும் சுகாதார நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment