வட மாகாணத்தில் கொரோனா தொடர்பில் அறிய 24 மணி நேர தொலைபேசி அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

வட மாகாணத்தில் கொரோனா தொடர்பில் அறிய 24 மணி நேர தொலைபேசி அழைப்பு

(தி.சோபிதன்) 

கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக வடக்கு மாகாணத்தில் 24 மணி நேர உதவி செய்யும் தொலைபேசி அழைப்பு இலக்கங்களை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வட மாகாணத்தில் கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்கு தேவையான ஆலோசனைகளையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன், வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் செயற்படும் வண்ணம் உதவி அழைப்பெண் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று (2020.03.30) முதல் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவையில் 021-2217982 அல்லது 021-2226666 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை மேற்கொள்வதனூடாக பொதுமக்கள் இந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment