(பைஷல் இஸ்மாயில்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அவர் தெரிவிக்கையில், கொவிட்-19 வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களை நாளை முதல் 14 முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானத்திற்கு இணங்க இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment