நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் போது பொகவந்தலாவ மோர கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேரும், ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடி கொண்டிருந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 11 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவமானது நேற்று (29) மாலை இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளை சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாணிக்கல் அகழ்வில் கைது செயய்பட்டவர்கள் நான்கு பேரும் பொகவந்தலாவ மோரா கீழ் பிரிவு தோட்டப்பகுயைச் சேர்ந்தவர்கள் எனவும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாற்றில் கைது செய்யப்பட்டவர்கள் பொகவநதலாவ செல்வகந்த மற்றும் கிலானி தோட்டப்பகுதிளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment