வித்தியா கொலையின் தடயப்பொருளை நீதிமன்றில் ஒப்படைக்காத முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

வித்தியா கொலையின் தடயப்பொருளை நீதிமன்றில் ஒப்படைக்காத முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர்

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமற்போயுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

தடயப் பொருளாக மோட்டார் சைக்கிள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படாமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment