நாவலடி மர்கஸ் அந்நூரில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வும், மர நடுகையும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

நாவலடி மர்கஸ் அந்நூரில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வும், மர நடுகையும்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியில் இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (4) இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜெயசுந்தர மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

No comments:

Post a Comment