அவிசாவளை, சீதாவாக்கை பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் வீழ்ந்து மூவர் உயிரிழந்துள்ளனர்.
மாளிகாவ மாவத்தையில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட குறித்த சுரங்கத்தில் வீழ்ந்த 2 கோழிகளை மீட்க சென்ற நபர்களே அதில் வீழ்ந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 17, 25, 27 வயதான மூவரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். நேற்று (02) இரவு 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சுரங்கத்தில் விழுந்த மூவரும் நினைவிழந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment