பாறுக் ஷிஹான்
72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதங்கள் பல்வேறு பகுதியில் இயற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (4) காலை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு மரியாதை செய்யும் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரு நிமிடம் மௌனபிராத்தனை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தில் பல்வேறு திணைக்கள பிரிவினரால் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment