ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் இப்ராஹிம் இன்சாஃப் அஹமட் எனும் குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயசுந்தர முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செல்வந்தரான மொஹமட் இப்ராஹிமின் தெமட்டகொடை பேஸ்லைன் வீதியின் மஹவில பூங்கா பகுதியிலுள்ள வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சந்தேகநபர்கள் ஆறு பேரையும் கைது செய்தனர்.
சுமார் 8 மாதங்களாக சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
No comments:
Post a Comment