சுதந்திர தின ஒத்திகையையிட்டு விசேட இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

சுதந்திர தின ஒத்திகையையிட்டு விசேட இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வு காரணமாக இன்று (31) முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒத்திகை நிகழ்வு இன்று (31) முதல் எதிர்வரும் 03ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இத்தினங்களில் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இவ்விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். 

இப்போக்குவரத்து திட்டத்தின் பிரகாரம் கிளாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டார் திசையில் நுழைதல், நூலகச் சந்தியிலிருந்து கிளாஸ் ஹவுஸ் திசையில் நுழைதல் மற்றும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் நுழைதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு தர்மபால மாவத்தையின் எப்.ஆர். சேனநாயக்க மாவத்தையில் நுழைதல், சொய்சா சுற்றுவட்டத்திலிருந்து கன்னங்கர மாவத்தைக்கு நுழைதல், விஜேராம மாவத்தையில் ரொஸ்மிட் பிளேஸ் மூலம் கன்னங்கர மாவத்தைக்கு நுழைதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஒத்திகை வேளையில் பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மெயிட்லன்ட் பிளேஸ் மற்றும் பிரேமகீர்த்தி அல்விஸ் மாவத்தைக்கு நுழைதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தையின் இலங்கை மன்ற வீதிக்கு நுழைவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் எதிர்வரும் 04ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு காரணமாக சுதந்திர சதுக்கப் பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வருடம் தேசிய சுதந்திர தினத்தின் தொனிப்பொருள் பாதுகாப்பான தேசம் செழிப்பான நாடு என்பதாகும்.

No comments:

Post a Comment