192 கிலோ கிராம் ஹெரோயின், 10 கைத்துப்பாக்கிகள், 19 மெகசின்களுடன் கைதான மூவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

192 கிலோ கிராம் ஹெரோயின், 10 கைத்துப்பாக்கிகள், 19 மெகசின்களுடன் கைதான மூவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

192 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் நேற்று (30) கைது செய்யப்பட்டனர்.

பேலியகொடை விசேட குற்றத்தடுப்பு பிரிவு, தெற்கு அதிவேக வீதிக்கு அருகே கெலனிகம பகுதியில் நேற்று முற்பகல் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றை சோதனைக்குட்படுத்திய போது 15 கிலோகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியை கைது செய்து விசாரணை செய்ததைத் தொடர்ந்து, களுத்துறை, பண்டாரகம பகுதியில் வீட்டுத்தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 177 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தவிர 10 கைத்துப்பாக்கிகள், 19 மெகசின்களுடன் அங்கிருந்த பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர். மேல் மாகாண வடக்கு பிரிவுக்கான குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment