பெற்ற சிசுவை கொன்று புதைத்த தாய்க்கு விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2019

பெற்ற சிசுவை கொன்று புதைத்த தாய்க்கு விளக்கமறியலில்

திருகோணமலையில் தான் பெற்ற சிசுவை கொலை செய்து புதைத்த தாயாரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் இன்று (13) ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை விலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவி சங்கர் நிரஞ்சலா (29 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி குறைமாதத்தில் பெற்ற சிசுவை சட்டவிரோதமான முறையில் புதைத்துள்ளதாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம். ஹம்சா தலைமையின் கீழ் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர மற்றும் பொலிஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த நிலையில் தனது கணவரை விட்டு தனிமையாக வாழ்ந்து வந்ததாகவும் இதேவேளை தன்னுடன் பழகிய நபருடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் குறை மாதத்தில் பிள்ளை பிறந்ததாகவும் இதேவேளை ஊசி மூலமாக பிள்ளையை வெளியேற்றியதாகவும் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment