இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைசந்தித்தார்.
ஜனாதிபதியுடன் சுமூகமாக கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக உறுதியளித்தார்.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய தொலைநோக்குடனான நிகழ்ச்சித் திட்டங்களை பாராட்டிய தூதுவர், அதனை வெற்றி பெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோன்னா கேம்பர்ஸ் (Joanna Kempkers) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து, தமது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, பரஸ்பர நன்மைகளை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக இதன்போது அவர்கள் உறுதியளித்தனர்.
No comments:
Post a Comment