பண்டாரவளையில் மண்சரிவு - இரு பெண்கள் கவலைக்கிடம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

பண்டாரவளையில் மண்சரிவு - இரு பெண்கள் கவலைக்கிடம்

பண்டராவளை ஆலய வீதியில் இன்று (01) முற்பகல் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் மண்சரிவில் சிக்குண்டனர். இதையடுத்து அங்கு கூடியவர்கள் உடனடியாக சரிந்த மண்னை அப்புறப்படுத்தி, குறித்த இரு பெண்களையும் மீட்டனர்.

அவர்கள் உடனடியாக தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

22 வயது நிரம்பிய இளபெண்ணொருவரும், 45 வயது நிரம்பிய பெண்ணும் ஒருவருமே இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர்.

(பதுளை விசேட நிருபர் - எம். செல்வராஜா)

No comments:

Post a Comment