மின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

மின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சி - சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னராசா சாரங்கன் என்ற இளைஞனே (22 வயது) உயிரிழந்துள்ளார்.

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள குறித்த இளைஞனின் தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரிசி ஆலையிலுள்ள பகுதி ஒன்றில் வெள்ள நீர் காணப்பட்டுள்ளது. குறித்த வெள்ள நீரை மோட்டார் ஊடாக இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின் தாக்கத்திற்கு உள்ளான குறித்த இளைஞனை மயக்கமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment