முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கபட்டு இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் எமது அரசாங்கத்தின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டங்களாக எதிர்வரும் காலங்களில் இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட உள்ளதாக மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று (30) நாவலப்பிட்டி நகரில் தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று இந்த மக்களுக்கு தெரியும் எமது ஜனாதிபதி பதவியினை பொறுப்பேற்று பத்து நாட்கள் கூட செல்லவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு அதிகரிக்கபட்டிருந்த பொருட்களுக்கு தற்பொழுது விலை குறைக்கபட்டுள்ளது.
தாங்கள் அனைவரும் பார்த்திருக்க கூடும் எமது ஜனாதிபதி எவ்வாறு இந்தியாவிற்கு சென்றார் என்று. சாதாரணமான ஒரு மனிதரை போல் சென்றார்.
இந்த நாட்டு மக்கள் இது போன்ற ஒரு மாற்றத்தினை தான் எதிர்பார்த்தார்கள். மாற்று கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும். அவர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சஜித் பிரேமதாசவை காணவில்லை. அவர் கதவை மூடிக்கொண்டு நித்திரையில் இருக்கிறார். அவருடைய கையடக்க தொலைபேசி கூட நிறுத்தி வைக்கபட்டுள்ளது. கேட்டால் கூறுகிறார்கள் சஜித் பிரேமதாசவிற்கு சுகமில்லை என்கிறார்கள்.
சஜித் பிரேமதாச நித்திரையில் இருக்கிறார். அவர் ஜனாதிபதியாகியிருந்தால் இந்த நாடு எவ்வாறு இருக்கும். ஆகையால் தான் இந்த நாட்டிற்கு முறையான தலைவர் ஒருவரை தெரிவு செய்யுமாறு கோரியிருந்தோம். இன்று சிறிகொத்தவில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டங்கள் இடம்பெறும் போது அந்த கூட்டங்களுக்கு சஜித் சமூகமளிப்பதில்லை.
வாக்களித்த மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சஜித் இல்லை.
ஆகையால் தான் இந்த நாட்டு மக்கள் 14 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்த நாட்டுக்கு ஒரு சிறந்த தலைவர் என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தார்கள் என்றார்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment