தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி சஜித்திற்கு ஆதரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 5, 2019

தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி சஜித்திற்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தாம் ஆதரவளிப்பதாக தேசிய ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.

வவுனியா வாடி வீட்டில் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 28.10.2019 அன்று நாம் கொழும்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தோம். இதன்போது எமது கட்சியின் பூரண ஆதரவினை சஜீத் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளோம். 

நாங்கள் 25 பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் அவ்ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் 25 கோரிக்கைககள் அடங்கிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பம் இட எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையேனவும் சஜீத் பிரேமதாச தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

கோவில்குளம் நிருபர்

No comments:

Post a Comment