ஐக்கிய தேசிய அரசாங்கம் 50 ரூபாவை பெற்றுத் தருவற்கு பதிலாக தேயிலை தொழிற்சாலைகளைத்தான் மூடியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 5, 2019

ஐக்கிய தேசிய அரசாங்கம் 50 ரூபாவை பெற்றுத் தருவற்கு பதிலாக தேயிலை தொழிற்சாலைகளைத்தான் மூடியுள்ளது

ஐக்கிய தேசிய அரசாங்கம் 50 ரூபாவை பெற்றுத் தருவற்கு பதிலாக தேயிலை தொழிற்சாலைகளைத்தான் மூடியுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சுப்பையா சதாசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவை ஏன் தோட்ட மக்கள் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்பதனை தோட்ட தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டம் நேற்றுமுன்தினம் இ.தொ.ஐ. முன்னணியின் ஹற்றன், அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்‌ஷவை நாம் ஆதரிக்கா விட்டாலும் தோட்டங்களுக்கு பல்வேறு வழிகளில் அபிவிருத்திகளை மேற்கொண்டார். தோட்ட பாதைகளை புனரமைத்தார், பாடசாலைகளுக்கு கட்டடங்கள், விஞ்ஞான கூடங்களை, தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் என பல சேவைகளை செய்துள்ளார்.

மாறாக ஐக்கிய தேசிய கட்சி என்ன செய்தது? 1000 ரூபா பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள் அதனை தொடர்ந்து அமைச்சரவையில் 50 ரூபா பெற்றுத்தர முடிவு செய்தார்கள், தீபாவளி முற்பணம் 5000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள் எனினும் எதுவுமே கிடைக்கவில்லை.

நாலரை வருடங்களாக மலையக மக்கள் பல்வேறு துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹற்றன் விசேட நிருபர்

No comments:

Post a Comment