எஸ் - 14 வகை வலுக்கொண்ட ‘தெனுவர மெனிக்கே’ என பெயரிடப்பட்டுள்ள புகையிரதம் தனது முதலாவது பயணத்தை இன்று (01) காலை முன்னெடுத்துள்ளது.
கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை நோக்கி தனது முதலாவது பயணத்தை ‘தெனுவர மெனிக்கே’ முன்னெடுத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமால் சில்பாலடி சில்வா ஆகியோர் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இன்று காலை 6.45 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து குறித்த புகையிரதம் புறப்பட்டுள்ளதோடு, பிற்பகல் 3.27 மணிக்கு பதுளையை சென்றடையும்.
No comments:
Post a Comment