திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றவாளியான 'கஞ்சிபானை இம்ரான்' என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானிற்கு இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வைத்திருந்த குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு தெரிவித்து, வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக, கஞ்சிபானை இம்ரான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
5.3 கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment