விமான நிலையத்தில் 14 இலங்கையர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2019

விமான நிலையத்தில் 14 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கொண்டுவந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 14 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (01) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 32 மில்லியன் ரூபா (ரூ.31,975,180) பெறுமதியான 4.7 கிலோ கிராம் தங்க நகைகளை இந்தியாவின் சென்னையிலிருந்து கொண்டுவந்த 30 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment