வேட்புமனு தாக்கலையடுத்து இன்றுவரை 2,393 முறைப்பாடுகள் - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2019

வேட்புமனு தாக்கலையடுத்து இன்றுவரை 2,393 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் சம்பந்தமாக 2,000 இற்கும் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (31) பிற்பகல் 4.00 மணி வரை பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,393 ஆக அதிகரித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (31) மாலை 4.00 மணி வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் 143 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டத்தை மீறியமை தொடர்பாக 138 முறைப்பாடுகளும் அடங்குகின்றன. 

தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 56 முறைப்பாடுகளும் மாவட்ட ரீதியான தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணை நிலையங்களுக்கு 87 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

வேட்புமனு தாக்கலையடுத்து கடந்த 08ஆம் திகதி முதல் நேற்று (31) வரையான காலப்பகுதியில் மொத்தமாக 2.393 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதில் சட்டத்தை மீறியமை தொடர்பில் 2.281 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 22 முறைப்பாடுகளும், 90 வேறு வகையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment