தொழில் இன்றேல் தேர்தல் பகிஷ்கரிப்பு - மட்டு. மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

தொழில் இன்றேல் தேர்தல் பகிஷ்கரிப்பு - மட்டு. மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

ஜனாதிபதி தேர்தலுக்கிடையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கா விட்டால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 2000க்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பார்கள் என மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவிதுள்ளது.

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் புதன்கிழமை (02) ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் அரச தொழில்களை வழங்க வேண்டும். தேர்தலுக்கிடையில் வழங்கா விட்டால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளும் அவர்களின் குடும்ப உறவினர்களும் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பார்கள்.
இது தொடர்பாக எமது கோரிக்கைகளை உள்ளிடக்கிய கடிதங்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகளைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கவுள்ளோம்.பல தடவைகள் நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம். இன்னும் எங்களை ஏமாற்றாமல் தொழிலை வழங்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000க்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். அவர்களின் குடும்ப உறவினர்களும் சேர்ந்து இந்த ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பார்கள்.எனவே எமது கோரிக்கையை கருத்திற் கொண்டு வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி தொழிலை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

புதிய காத்தான்குடி நிருபர்

No comments:

Post a Comment