தெற்கில் முதியோர் இல்லங்களை அனுமதிக்கவில்லை, தாயை வழிபட்டு விட்டே கடமைக்கு செல்வேன் - முதியோர் தின நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

தெற்கில் முதியோர் இல்லங்களை அனுமதிக்கவில்லை, தாயை வழிபட்டு விட்டே கடமைக்கு செல்வேன் - முதியோர் தின நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்

தென் மாகாணத்தில் தான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் எந்தவொரு முதியோர் இல்லங்களையும் அமைக்க அனுமதி வழங்க வில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதியோர் தின நிகழ்வு நேற்று (03) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் தான் 30 வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளதுடன் , 15 வருடங்களாக முதலமைச்சராக இருந்துள்ளேன். அப்போது முதியோர் இல்லங்களை அமைப்பதற்கு இடமளிக்கவில்லை. முதியோர்கள் பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்தேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

எனது தாயாருக்கு 84 வயது, நான் வீட்டிலிருந்து புறப்படும் போது எனது தாய் அருகே சென்று வழிபட்டு விட்டே எனது கடமைக்குச் செல்வேன். இதேபோன்று எனது பிள்ளைகளும் அவ்வாறே எனது அருகே வந்து ஆசீர்வாதத்தை பெற்று கடமைகளுக்கு செல்கின்றனர். 

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது உலகத்தில் அனைவரும் தங்களது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். ஒரே வீட்டில் சாகும்வரை இருப்பதையே நான் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன,முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ. எச். எம்.அன்சார் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

No comments:

Post a Comment