கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழர்களின் இருப்பு பறிபோகிறது - யாழில் முஸ்லிம்களுக்கு நவீன வீடுகளை கட்டி கொடுக்கிறார்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழர்களின் இருப்பு பறிபோகிறது - யாழில் முஸ்லிம்களுக்கு நவீன வீடுகளை கட்டி கொடுக்கிறார்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழர் தாயக பூமியில் தமிழர்களின் இருப்பு பறிபோகிறது என சிறிலோ இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தனது ஊடக அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார். 

தொடர்ந்தும் அவரது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது கடந்த ஐந்து வருடங்களாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி எந்த தீர்வையும் பெற முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவு வழங்கி இனிதான் தீர்வை பெற்று தரப்போகிறதா..? 

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் தமிழின அழிப்பை உருவாக்கிவிட்ட கட்சியின் கொடூரங்களை மறந்து 2009ல் இடம்பெற்ற அவலங்களை முன்னிருத்தி ஆதரவு வழங்குகிறீர்களே இது எவ்விதத்தில் நியாயம்? 

இன்று யாழில் முஸ்லிம்களுக்கு நவீன வீடுகளை கட்டி கொடுக்கிறார்கள். தமிழர் தாயகத்தில் தமிழரின் இருப்புக்கள் கேள்விக்குறியாகி நிற்கிறது, முல்லையில், நெடுங்கேணியில், கிண்ணியாவில் எல்லாம் குடியேற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலங்களை விட இந்த ஆட்சியிலேயே இவ்வாறான கொடூரங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது. 

கடந்த ஆட்சியை விட இவ்வாட்சியில் விடுதலை செய்த அரசியல் கைதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இவ்வாறிருக்க தொடர்ந்தும் அரசுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது என்பது எந்த விதத்தில் நியாயம்? 

எனவே உங்கள் செயற்பாடுகள் தெட்டத்தெளிவாக ஒரு விடயம் தெரிகிறது, தமிழினத்திற்குள் எந்த நேரமும் பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்க வேண்டும். அவற்றை வைத்து நீங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வேண்டும், சர்வதேசத்திற்கும் புலம்பெயர் மக்களுக்கும் எமக்கு தீர்வு கிடைக்காது எனவும் அரசாங்கம் தவறு என்றும் குற்றம் சுமத்தி புலம்ப வேண்டும் இது தான் உங்களின் கொள்கை என்பது தெளிவாகிறது. 

அன்பார்ந்த தமிழர் தாயக மக்களே இனியும் நாம் ஏமாறாது எமது தாயகத்தில் தமிழினம் மேலோங்கி வாழவும் எமது இருப்புக்களையும் எமது பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்ளவும் சிந்தித்து செயற்பட வேண்டும். தொடர்ந்தும் நாம் ஏமாற முடியாது என்பதை எம்மை ஏமாற்றவும் முடியாது என்பதை நிரூபிப்போம். 

கோவில்குளம் குறூப் நிருபர்

No comments:

Post a Comment