அல்-பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ். அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

அல்-பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ். அமைப்பு

அமெரிக்க இராணுவத்தினரால் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதை ஐ.எஸ் அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக பலமுறை ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால், அவை எல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல்களாகவே அமைந்திருந்தன.

இதற்கிடையே, ஐ.எஸ். இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிப்பை விடுத்தார்.

இந்நிலையில், அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதை ஐ.எஸ். அமைப்பு இன்று உறுதி செய்துள்ளது. 

பாக்தாதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஐ.எஸ் இயக்கத்தின் புதிய தலைவராக இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷியை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment