ஒரு வாக்குக் கூட சிதறடிக்கப்படாமல் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

ஒரு வாக்குக் கூட சிதறடிக்கப்படாமல் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும்

முஸ்லிம் சமூகம் யாரை வெல்ல வைக்க வேண்டும் என ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு வாக்குக் கூட சிதறடிக்கப்படாமல் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். 

இந்நாட்டில் ஒற்றுமை, நிம்மதி, பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு, சொத்துக்கள் பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்றார்.

குருநாகல் தல்கஸ்பிட்டியவில் ரூபா 20 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இன ஒற்றுமை பேசப்படுகிறது. நாங்கள் பிரிந்து வாழ முடியாது. நாங்கள் எல்லோரும் இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். இந்த நாட்டில் ஒன்று சேர்ந்து இனவாதம் இல்லாமல் மதவாதம் இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக வாழுகின்ற ஒரு நல்ல தலைமைத்துவத்தை இந்நாட்டுக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்று பட்டு இருக்கின்றார்கள்.

இந்தப் போராட்டத்தில் யாரை வெல்ல வைப்பதன் மூலமாக எங்கள் நிம்மதி பாதுகாக்கப்படும். மானம், மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக எல்லாம் நாங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். 

மலையகம் , தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடித்து கொள்ளையிடுவதற்காக இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக எல்லா இடங்களிலும் முகவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

மாவத்தகம நிருபர்

No comments:

Post a Comment