ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 13 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். நவ சமசமாஜ கட்சி சார்பில் பத்தேகமகே நந்திமித்ர, சோசலிச சம உடமை கட்சி சார்பில் வஜிரபானி விஜேசிரிவர்தன, நவ சிஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திர மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதன் பிரகாரம் கட்சிகள் சார்பில் 9 வேட்பாளர்களும் 4 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, கெடகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க, அஜந்தா விஜேசிங்க பெரேரா, அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ, ஆரியவங்ச திஸாநாயக்க, சிறிதுங்க ஜயசூரிய, வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ, ஆகியோர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அறிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை 6ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment